இந்திய – மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி!

இந்திய – மும்பையில் பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக இந்திய – மும்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதன்னடிப்படையில் இந்திய – மும்பை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

முன்னதாக, நகையகத்தை நடத்தி வந்த பிளாட்டினம் ஹெர்ன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு வெளிநாட்டினர் உட்பட மூன்று பேர், 2025 ஜனவரி 7ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குற்றச்சாட்டுக்களின் பேரில், தேடப்படும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தௌசிப் ரியாஸ் என்கிற இந்தியரான ஜோன் கார்ட்டர் மற்றும் உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த ஒலேனா ஸ்டோயன் ஆகிய இருவரும், தமது அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்காக அங்கு சென்று திரும்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வரை, 3,700 முதலீட்டாளர்கள் குறித்தவர்கள் தொடர்பில் மோசடி குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதன்படி மோசடி செய்யப்பட்ட தொகை 57 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த திங்களன்று, அதிகாரிகள், குறித்த நகையகத்தின் அலுவலகத்தை சோதனை செய்து, 14 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 21 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள், முதலீட்டு ஆவணங்கள் உட்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மோசடி தொடர்பில் இந்திய நாட்டவரான ரியாஸ் மற்றும் இம்ரான் ஜாவேத், துருக்கிய நாட்டவரான முஸ்தபா கரகோக், உக்ரைனிய நாட்டவர் ஸ்டோயன் மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் விக்டோரியா கோவலென்கோ உட்பட 11 பேர் தேடப்படுவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!