அமெரிக்காவில் ஒரே நாளில் 39 பேருக்கு மன்னிப்பு : ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் பதவியில் இருந்து விலகிச் செல்லவேண்டிய நிலையில், தனது பதவியின் இறுதி காலத்தில் சுமார் 1,500 பேருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைகளை அவர் குறைத்துள்ளார்.

அத்துடன் 39 பேரை அவர் மன்னித்துள்ளார், இந்தநிலையில், நாட்டின் வரலாற்றில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கருணை செயல் என்று வெள்ளை மாளிகை இதனை விபரித்துள்ளது.

இதன்படி நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1,500 பேரின் தண்டனைகளையும் மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். .

சுட்டவிரோதமாக துப்பாக்கியை கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த தமது மகனான, ஹண்டரை மன்னித்த இரண்டு வாரக்காலத்தில், இந்த மன்னிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளார் . எனினும் பைடனின் இந்த செயலை குடியரசுக் கட்சியினர் கண்டித்துள்ளனர்.

மகனின் மன்னிப்பை மூடி மறைப்பதற்காக அதிகமானோரை மன்னிக்கும் திட்டத்தை அவர் செயற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப எதிர்வரும் ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இதனையடுத்து, பைடனின் இந்த மன்னிப்பு திட்டம் மீண்டும் அரசியலாக்கப்படுமா என்பது குறித்து தெளிவான கருத்துக்கள் வெளியாகவில்லை.

Related News

நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More
இந்திய – மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி!

இந்திய – மும்பையில் பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக இந்திய – மும்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்னடிப்படையில் இந்திய – மும்பை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், முன்னதாக,…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!