கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார்.

39 வயதான குறித்த பெண் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்ததுடன் அவரது மகன் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜூனும் குறித்த திரையரங்குக்குச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் சம்பவம் இடம்பெற்ற திரையரங்கின் நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பின்னர் மேல் நீதிமன்றினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திரையரங்குக்கு வருவது தொடர்பில் அவர், தங்களுக்கு அறிவிக்கவில்லை என திரையரங்கத்தின் நிர்வாகத்தினர் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

Related News

‘ ஜன நாயகன்’

தமிழகத்தில் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘விஜய் 69 ‘எனும் திரைப்படத்திற்கு ‘ ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான…

Read More
நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!