மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை!

கொழும்பில் மகனை கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த அப்துல் அஸீஸ் மொஹமட் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக போதைப்பொருள் பாவனை காரணமாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகநபர், உரிய புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் மகன் மாளிகாவத்தை, ஜும்மா வீதி பகுதியில் மரக்கறி விற்பனை செய்யும் வியாபாரி என தெரியவந்துள்ளது

சந்தேக நபரான தந்தை கடந்த 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் மரக்கறி வியாபார நிலையத்திற்குச் சென்ற போது, ​​ மகனை கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தில் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த மகன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாது என பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!