ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் ஹமாஸ் பயங்கரமான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஹமாஸ் படையினரால் இஸ்ரேல் எல்லையில் நடாத்தப்பட்ட தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டதோடு 250 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் கடத்தியிருந்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!