![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/12/pirithaniya-1.jpg)
ஐரோப்பிய கடவுச்சீட்டு (European Passports) வைத்திருப்போர், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி முதல் பிரித்தானியாவிற்குள் (UK) நுழைவதற்கு, முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த திகதியில் இருந்து, மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization – ETA) என்னும் இலங்கையில் உள்ள நடைமுறையை பிரித்தானியாவும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, பிரித்தானியாவிற்குள் நுழைவது மாத்திரமன்றி, அந்நாடு வழியாக வேறொரு நாட்டிற்கு டிரான்ஸிட் மூலம் செல்வதற்கும் முன்னனுமதி பெற வேண்டும்.
இந்நடைமுறையானது, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாட்டு பிரஜைகளுக்கு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் அந்நாட்டின் உத்தியோகபூர்வ இணைய தளங்களில் தகவல்களையும், அனுமதிக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.