நாட்டின்,ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுமென கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேசிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்ளையில் பனி மூட்டம் காணப்படும்.
மாத்தறை தொடக்கம் மாத்தறை , ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
பேருவலை தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கூறியுள்ளார்.