அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம்!

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இம் மாதம் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

டொனால்ட் லூவின் விஜயமானது தென் ஆசியாவிலுள்ள முக்கிய பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கவுள்ளது.

அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ , இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆதரித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்தும் குறித்து இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெறும் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்கின்றார்.

டொனால்ட் லூ , கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பணியாளர் செயலாளர் டேனியல் க்ரிடன்பிரிங்குடன் இணைந்து, அமெரிக்காவின் பங்குபற்றலை இந்தியா – அமெரிக்கா கிழக்கு ஆசியா ஆலோசனைகளை (U.S.-India East Asia Consultations) முன்னேடுப்பார். இந்த ஆலோசனைகளும், இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனித்தனியே மேற்கொள்ளப்படும் சந்திப்புகளும் உலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் முக்கிய பங்காற்றும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்கா மற்றும் இலங்கை கூட்டாக இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவார்.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகாமைத்துவத்திற்கான துணை உதவியாளர் அஞ்சலி கவூர் மற்றும் பொருளாதார அமைச்சக அதிகாரி ரொபர்ட் காப்ரோத் ஆகியோர், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் சிரேஷ் அதிகாரிகளுடன், மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளுக்களிலும் டொனால்ட் லூ, இணைந்து கொள்வார்.

இந்த சந்திப்புகள் புதிய அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்தி, அதன் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஆதரித்து, நிதி மற்றும் திறன் கட்டமைப்பின் மூலம் இலங்கையின் ஆட்சி மற்றும் பொருளாதார சீரமைப்பு திட்டங்களை ஆதரிக்கும் வகையில் அமெரிக்கா எவ்வாறு உதவி வழங்கும் என்பது குறித்து ஆராயப்படும்.

தனது பயணத்தை நேபாளத்தின் காத்மாண்டுவில் நிறைவுசெய்யவுள்ள டொனால்ட் லூ, அங்கு தொடர்புகளை வலுப்படுத்தி, சுற்றுப்புறப் பாதுகாப்பு, பெண்கள் அதிகாரம், நிலையான அபிவிருத்தி போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவார். எதிர்கால அமெரிக்கா-நேபாள உறவுகளுக்கான இளம் தலைமுறையினரின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

Related News

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால்…

Read More
கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!