வத்தேகம பொலிஸ் பிரிவின் அட்டலஹகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை வத்தேகம பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
வத்தேகம, அட்டலஹகொட பகுதியில் கடந்த 4ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 35 மற்றும் 37 வயதுடைய கரந்தெனிய, கேகாலை மற்றும் ஹெட்டிமுல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.