படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேட்கொண்டு வரும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
40 முதல் 45 வயது மதிக்கத்தக்க 05 அடி 06 அங்குலம் உயரமுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் தகவல்களை மேற்கொண்டு வருகின்றனர்.