இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

2024ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72 கடற்றொழில் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பதற்காக நாம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில், இந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது 554 பேரை எல்லை தாண்டிய குற்றத்துக்காக கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக கையளித்துள்ளோம்.

அதேபோன்று, எல்லை தாண்டிய மற்றும் சட்டவிரோதமான கடற்றொழில் முறைமைகளைக் கொண்ட 72 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளோம்.

விசேடமாக, அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து நாம் உயிர்ச் சேதங்கள் இடம்பெறாத வகையில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையின் கடற்பரப்பினையும், வளங்களையும், கடற்றொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம
க்குள்ளது.

அந்த வகையில் தான் நாம் அத்துமீறி எல்லை தாண்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எனினும், எல்லை தாண்டுபவர்கள் மீது தொடர்ந்தும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆகவே, இந்திய கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகளை கைவிடுவதோடு அத்துமீறி இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுகின்றோம்” குறிப்பிட்டுள்ளார்.

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!