நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துத்துக் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இதன்போது வாகன இற்குமதி தொடர்பில் விரிவான கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு சில வருடங்களின் பின்னர் மீண்டும் தடைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதல் தொகுதி வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அனுமதியின் அடிப்படையில் டொயோட்டா லங்கா நிறுவனம் அந்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
டொயோட்டா லங்கா தனியார் நிறுவனம் இதுவரை பேருந்துகள் மற்றும் வான்கள் உட்பட 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.