மேடையிலேயே இப்படியா?; ஜெர்மனி பெண் அமைச்சருக்கு முத்தமிட முயன்ற குரேஷியா அமைச்சர் – ஒரே பரபரப்பு..!!

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அவ்வப்போது ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாநாட்டுக்கு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை ஜெர்மனி வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்போக் வரவேற்றார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று மேடையில் புகைப்படம் எடுத்து கொள்ள முயன்றனர்.

இந்த வேளையில் குரேஷியா நாட்டின் 65 வயது நிரம்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் முகம் சுளிக்கும் வகையிலான செயலை செய்தார். அதாவது அவரை வரேவற்ற ஜெர்மனி பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்போக்கினிடம் கைக்குலுக்கியதோடு, கன்னத்தில் திடீரென முத்தமிட முயன்றார். இதனால் அன்னாலெனா பேர்போக் அதிர்ச்சியடைந்து விலகினார்.

இந்த சம்பவத்தால் அன்னாலெனா பேர்போக் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி குரேஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் கூறுகையில், ‛‛சக ஊழியரிடம் அன்பான முறையில் தான் நடந்து கொண்டேன். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்னவென்று தெரியவில்லை” என்றார். இதற்கு குரோஷிய பெண் உரிமை ஆர்வலர் ராடா போரிக் கூறுகையில், ‛‛கோர்டன் கிர்லிக் ராட்மேன் நடத்தை என்பது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

Related News

நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More
இந்திய – மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி!

இந்திய – மும்பையில் பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக இந்திய – மும்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்னடிப்படையில் இந்திய – மும்பை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், முன்னதாக,…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!