கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமித்புர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.