போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து கடமைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக  காட்டும் போது பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான மின்விளக்குகளைப் பயன்படுத்துவதனால் மின்விளக்குகளின் வெளிச்சம் வாகன ஓட்டுநர்களின் முகத்தில் படுவதால், சில சந்தர்ப்பங்களில் வாகனத்தை கையாள்சமிஞ்ஞைவதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒளி பிரதிபலிக்கும் ஜாக்கட்டுகள் அணியாதிருப்பதனால் அவர்களுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இன்று முதல் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாகனங்களை நிறுத்துவதற்காக தற்போது பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின் சமிஞ்ஞை விளக்குகளை பயன்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரவு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இந்தநடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா, என்பதைத் தொடர்ந்தும் கண்காணிக்குமாறு தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related News

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால்…

Read More
கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!