காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது சகோதரன் பலி!

கலிபோர்னியாவில் காட்டுதீயினால் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது சகோதரன் தீயிலிருந்து தனது வீட்டை பாதுகாக்க முயன்றவேளை உயிரிழந்தார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனை விட்டுவிட்டு தான் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட தருணங்களை அந்த பெண் விபரித்துள்ளார்.

அல்டடெனா பகுதியில் காட்டு தீ வேகமாக பரவத்தொடங்கியதும் தீயணைப்பு வீரர்கள் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மன்றாட்டமாக கேட்டனர் ஆனால் எனது சகோதரன் அவர்களின் வேண்டுகோளை செவிமடுக்கவில்லை என ஷாரிசோ என்ற பெண் தெரிவித்துள்ளார்.

எனது 66 வயது சகோதரன் என்னுடன் வசித்துவந்தார், அவர் கடும் உடல்நலபாதிப்புகளை எதிர்கொண்டிருந்த ஒருவர் ,அவர் தான் அங்கேயே தங்கியிருந்து வீட்டை பாதுகாக்க முயலப்போகின்றேன் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள ஷாரிசோ நான் அவரை அங்கேயே விட்டுவிட்டு வரும் மனதை வருத்தும் முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன் என தெரிவித்துள்ளார்.

தீ மிகப்பெரியதாக தீப்புயல் போல காணப்பட்டதால் நான் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுக்கவேண்டியிருந்தது,நான் புறப்பட்டவேளை திரும்பிபார்த்தேன் வீடுதீயின் பிடியில் சிக்குண்டிருந்தது நான் அங்கிருந்து வெளியேறவேண்டியிருந்தது எனஅவர் தெரிவித்துள்ளார்.

55 வருடங்களாக தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவர் பாதுகாக்க முயன்றுள்ளார் போல தோன்றுகின்றது என ஷாரிசோ தெரிவித்துள்ளார்.

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!