காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா?

ராகவா லாரன்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன்பின் நினவுக்கு வரும் ஒரே விஷயம், காஞ்சனா படம் தான்.

முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதனால் காஞ்சனா 4 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இடம் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்-ல் இருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதே போல் இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி என பின் தெரியவந்தது.

இந்த நிலையில், காஞ்சனா 4 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே தான் பேயாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த தகவல் உண்மையா அல்லது இதுவும் வதந்தி தானா என்று. பூஜா ஹெக்டே கைவசம் தற்போது தளபதி 69, ரெட்ரோ ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related News

‘ ஜன நாயகன்’

தமிழகத்தில் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘விஜய் 69 ‘எனும் திரைப்படத்திற்கு ‘ ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான…

Read More
நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!