கரூர் திமுக மேயர் 3 மாதத்தில் ஜெயிலுக்கு போவது உறுதி – சத்தியம் செய்த அண்ணாமலை..!!

தமிழ்நாடு

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தனது சொந்த மாவட்டமான கரூரில் பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது, கரூர் மேயர் கவிதாவை ரவுடிக் கும்பலுக்கு தலைவி என்றும் வருமான வரித்துறைத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கிலிருந்து கவிதா ஒரு போதும் தப்ப முடியாது எனவும் அண்ணாமலை காட்டமாக எச்சரித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளியே கரூர் மேயர் கவிதா தான் என்றும் தாங்கள் பெட்டிஷன் போடவுள்ளதாகவும் மேயர் கவிதா எங்கே தப்பித்துச் செல்கிறார் என பார்த்துவிடுகிறோம் எனவும் அனல் கக்கினார் அண்ணாமலை.

செந்தில்பாலாஜியே இன்னும் உள்ளே தான் இருக்கிறார் என்றும் அவரை விட கரூர் மேயர் கவிதா என்ன பெரிய ஆளா என வினவிய அண்ணாமலை, இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதம் வேண்டுமானால் ஆகலாம் ஆனால் மூன்று மாதத்தில் உள்ளே செல்வது உறுதி என அடித்துக் கூறினார்.

மத்திய அரசு அதிகாரிகள் மீது கை வைத்திருக்கிறீர்கள் அது சிபிஐ விசாரணைக்கு போகாதா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கரூர் மேயர் கவிதா எங்கேயும் தப்பி ஓட முடியாது என சவால் விடுத்தார். கரூர் மேயர் கவிதா வெளியே இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துக் கொள்ளட்டும் என்றும் அதுவரை பாஜகவின் ப்ளக்ஸ் பேனர்களை கிழிப்பது, போஸ்டர்களை கிழிப்பது போன்ற பணிகளை பார்த்துக்கொள்ளட்டும் எனவும் உள்ளே சென்றுவிட்டால் இதை செய்ய முடியாது எனவும் கலாய்த்தார்.

ரொம்ப ஆடக்கூடாது என்றும் ஆடியவர்கள் எல்லாமே இன்று உள்ளே இருக்கிறார்கள் எனவும் கூறிய அண்ணாமலை, நடப்பதை எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். கரூரில் இல்லாத கெட்டப்பழக்கம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் கரூருக்கு வந்துவிட்டதாகவும் இதனை தடுக்க வேண்டியவர்கள் தடுக்கத் தவறிவிட்டதாகவும் சாடினார்.

Related News

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

இந்திய கடற்படைக்கு இந்திய ரூபா 2,960 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகள் வாங்குவதற்கு இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. புதிய ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பலில்…

Read More
யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!