கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன்
30 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு
காயமடைந்துள்ளார்.
காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.