அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!
அரிசி இறக்குமதிக்கான அனுமதியை ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.