கனடாவினை சேர்ந்த நண்பர்கள் இருவர் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் 1 மில்லியன் டொலரை பரிசாக பெற்றுள்ளனர்.
வான்கூவரை சேர்ந்த வாய் ஹிங் யுவன்மற்றும் டாங் மெய் டெங் என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர்களுக்கு பணப்பரிசு கிடைத்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி குறித்த சீட்டு வாங்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான அறிவிப்பால் நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.