ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மல்லியப்பு சந்தியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பேருந்து சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.