வாகன விலை கூடுமா? குறையுமா?

பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி ஆரம்பித்ததும் வாகனங்களின் விலை அதிகரிக்குமெனவும், அதன் பின்னர் படிப்படியாக அது குறைவடையுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி செய்யப்படும் போது 190 ரூபாவாக காணப்பட்ட டொலரின் பெறுமதி தற்போது 300 ரூபாவாக காணப்படுகிறது. அதன் காரணமாக 40 சதவீத அதிகரிப்பு வாகன விலையில் ஏற்படுமென மேலும் அவர் கூறியுள்ளார்.

 

வாகன இறக்குமதியின் பின்னர் புதிய வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்குமான விலை வித்தியாசம் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கும். அதன் காரணமாக வாகன விலைகளை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி கூறியுள்ளார். வங்கிகள், கடன் வழங்குனம் நிறுவனங்கள் வட்டிவீதங்கள் என்ற காரணிகள் இரண்டாம் பாவனை வாகனங்களுக்கு காணப்படுவதாகவும், அவை சீர் செய்யப்பட்ட பின்னர் வாகனங்களின் விலை படிப்பபடியாக குறைவடையுமென மேலும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதுவரை சுமார் 20,000 வாகன அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அந்த அனுமதி வைத்திருப்பவர்களுக்கு தற்போது இடமளிக்கப்படாது. இந்த அனுமதி வைத்திருப்பவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் தற்போது அவர்களோடு பேசி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “பெப்ரவரி 1 முதல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, ஆண்டு முழுவதும் இறக்குமதி தொடரும். இருப்பினும், பெப்ரவரி மாதத்தில் அனைத்து வாகன இறக்குமதிகளுக்கும் ஒரே நேரத்தில் சந்தையைத் திறக்க அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அநுர நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!