நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை சற்று இடைநிறுத்தப்பட்டது !

சீரற்ற வானிலை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான இலங்கை – இந்திய கப்பல் சேவை கடந்த வியாழக்கிழமையிலிருந்து (நவம்பர் 7) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்தப்பட்டது .

கப்பல் சேவையின் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன், மழையுடனான வானிலையின் தாக்கம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய தினங்களில் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். நாளை (நவம்பர் 12) வானிலை சரியாக இருந்தால் சேவை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது; இருப்பினும், தற்போதைக்கு நவம்பர் 16க்கு மேல் முன்பதிவு செய்யவில்லை.

கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசையைப் பொறுத்து கப்பல் பயணத்தின் பாதுகாப்பு தீர்மானிக்கப்படுகிறது, இதற்காக வானிலை முன்னறிவிப்பு மற்றும் Windy app போன்ற செயலிகளின் உதவியை நிறுவனம் பெறுகிறது. இதேபோல், வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக வர்த்தகப்பகுதி கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • Related News

    பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

    பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

    Read More
    நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

    மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!