இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மாகாணங்களின் சில இடங்களில் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மேல் மழை ஏற்படலாம்.

காலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பனிமூட்டம் காணப்படும்.

மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை கடல் பிராந்தியங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பதிவாகும்.
மணித்தியாலத்திற்கு 15-30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் காற்று வீசும். சில இடங்களில் வேகம் 40-45 கிலோமீற்றராக அதிகரிக்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கடல் பிராந்தியங்களில் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Related News

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

    Read More
    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!