போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து கடமைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக  காட்டும் போது பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான மின்விளக்குகளைப் பயன்படுத்துவதனால் மின்விளக்குகளின் வெளிச்சம் வாகன ஓட்டுநர்களின் முகத்தில் படுவதால், சில சந்தர்ப்பங்களில் வாகனத்தை கையாள்சமிஞ்ஞைவதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒளி பிரதிபலிக்கும் ஜாக்கட்டுகள் அணியாதிருப்பதனால் அவர்களுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இன்று முதல் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாகனங்களை நிறுத்துவதற்காக தற்போது பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின் சமிஞ்ஞை விளக்குகளை பயன்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரவு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இந்தநடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா, என்பதைத் தொடர்ந்தும் கண்காணிக்குமாறு தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!