சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயம் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை காரணமாக அதிகளவான நோயாளர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர் பிரபா அபயக்கோண் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.