கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிஹிந்துசேனபுர பிரதேசத்தில் கொக்கேன் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிசார் தெரிவித்தனர்.
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 750 மில்லி கிராம் கொக்கேன் போதைப்பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.