ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள்!

புத்தாண்டு தினத்தின் அதிகாலை 6.00 மணியுடன் நிறைவுபெற்ற ஒருவார காலப்பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் வழக்கு பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் 23ஆம் திகதி தொடக்கம் பொலிசார் விசேட போக்குவரத்துக் கண்காணிப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது கடந்த ஒருவார காலத்துக்குள் 7264 போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவற்றில் மதுபோதையில் வாகனம் செலுத்தல் 529, ஆபத்தான மற்றும் அலட்சியமாக வாகனம் செலுத்தல் 57, அதிவேகத்தில் வாகனத்தில் செலுத்தல் 54, வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறிய சம்பவங்கள் 1057, சாரதி அனுமதிப்பத்திர முறைகேடு சம்பவங்கள் 614, மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் 4953 சம்பவங்கள் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே புத்தாண்டு தினத்தின் இரவு நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!