ராஜாங்கனை, அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.
சிலாபம் – வெலிஹேன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனே உயிரிழந்தார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், வீதியைக் கடக்க முற்பட்ட நாயுடன் முச்சக்கரவண்டி மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளளனர்.
சாரதி மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.