பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும் செம்பியன்ஸ் கிண்ண அணியில் மீண்டும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

அவர் 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78, 20க்கு 20 போட்டிகளில் விளையாடி, அனைத்து வடிவங்களிலும் சதம் பெற்றுள்ளார்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு பங்களாதேஸின் சர்வதேச அணியிலிருந்து தமீம் விலகினார், ஆனால் நாட்டின் அப்போதை பிரதமரின் தனிப்பட்ட தலையீட்டிற்குப் பின்னர், தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

எனினும் அவர், 2023 உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், செம்பியன்ஸ் கிண்ணத்துக்கான அணியில் அவரை மீண்டும் சேர்க்க ஆர்வமாக இருந்த தேசிய தேர்வாளர்களை சந்தித்த நிலையிலேயே, தமீம் தற்போது ஓய்வையும் அறிவித்துள்ளார்.

செம்பியன்ஸ் கிண்ணம் போன்ற ஒரு பெரிய போட்டி வருவதால், தம்மை சுற்றி மீண்டும் விவாதங்கள் நடைபெறுவதையும், இதனால் அணியின் கவனம் சீர்குலைவதையும் தாம் விரும்பவில்லை என்று குறிப்பிட்டே அவர் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

செம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகள், 2025 பெப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகின்றன.

இதில் பங்களாதேஷ் குழு யு இல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுடன் இடம்பெற்றுள்ளது.

Related News

அறிமுக விருதுகள்!

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விருதுகள் அறிவிக்கப்பபட்டு வருகின்றன. அதன்படி சிறந்த அறிமுக வீரர் விருதை இலங்கை அணியின் வீரர் கமிந்து மென்டிஸ் வெற்றி பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில் சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய நிலையில் சிறந்த அறிமுக வீரர்…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!