வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபலென்கா சுவீகரித்தார்!

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிறிஸ்பேனில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகி இருந்தார்.

இந்த வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த சபலென்கா, அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வருடத்தின் முதலாவது மாபெரும் டென்னிஸ் போட்டியான அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் பட்டத்திற்கு குறிவைத்து விளையாடவுள்ளார்.

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை போலினா குடேமெட்டோவா ஆகிய இருவரும் நடுநிலையாளர்களாக பங்குபற்றினர்.

மூன்று செட்கள் நீடித்த இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 – 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் போலினா குடேமெட்டோவா வெற்றிபெற்றார்.

அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த அரினா சபலென்கா 6 – 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று செட்கள் நிலையை 1 – 1 என சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானம் மிக்க மூன்றாவது செட்டில் மிகத் திறமையாக விளையாடிய சபலென்கா 6 – 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்று சம்பியனானார்.

சபலென்கா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்றெடுத்த 18ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் செக் வீரர் லெஹெக்கா சம்பியன்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் செக் வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

ஆடவர் டென்னிஸில் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்சை கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ரெய்லி ஒபெல்கா, இறுதிப் போட்டியில் உபாதைக்குள்ளாகி ஒய்வு பெற்றதால் முதல் செட் நிறைவடைவதற்கு முன்னரே ஜிரி லெஹெக்கா சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

அப் போட்டியின் முதல் செட்டில் 4 – 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜிரி லெஹெக்கா முன்னிலையில் இருந்தார். அப்போது ரெய்லி ஒபெல்காவின் மணிக்கட்டில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இதனை அடுத்து ஜிரி லெஹெக்காவுக்கு வோக்ஓவர் (walkover)முறையில் வெற்றியை அளித்த மத்தியஸ்தர் அவரை சம்பியனாகப் பிரகடனப்படுத்தினார்.

Related News

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார். இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும்…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!