லிபிய கடற்பரப்பில் துயரம் – படகிலிருந்துவிழுந்த 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர்!

லிபிய கடற்பகுதியில் படகிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர்.

லிபியா கடற்கரையிலிந்து 20 கிலோமீற்றர் தொலைவில் படகொன்றிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள்   காணாமல் போயுள்ளதாக  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் கொந்தளிப்பான கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திங்கட்கிழமை லிபியாவின் ஜூவாரா துறைமுகத்திலிருந்து 27 பேருடன் படகொன்று புறப்பட்டதாகவும் இவர்களில் 20 பேர் படகிலிருந்து கடலில் விழுந்து காணாமல்போயுள்ளனர் ஏனைய ஏழுபேரும் பயணத்தை தொடர்ந்துள்ளனர் இறுதியாக இத்தாலியின் பொலிஸ் ரோந்து பிரிவினர் அந்த படகை லம்பெடுசா தீவில் கண்டுபிடித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

லிபியாவிலிருந்து புறப்பட்டு ஐந்து மணித்தியாலத்தில்படகிற்குள் தண்ணீர் வரத்தொடங்கியது படகு ஆடத்தொடங்கியது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளதுடன் பதற்றம் அச்சம் காரணமாக 20 பயணிகள் கடலில் விழுந்துள்ளனர் என உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.

கடலில் விழுந்தவர்களில் பெண்கள் சிறுவர்களும் இருந்தனர் இவர்கள் சிரியா எகிப்து சூடானை சேர்ந்தவர்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் மிகவும் கொந்தளிப்பாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளனர்.

உயிர்தப்பியவர்களில் சிரியாவை சேர்ந்த சிறுவனும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

தோல்வியடைந்த இலங்கை அணி!

தோல்வியடைந்த இலங்கை அணி!

இன்றைய வானிலை 24.01.2025

இன்றைய வானிலை 24.01.2025

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!