போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஒருமாதத்தை கடந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நடைபெற்று வருகிறது.

போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், காசா மற்றும் இஸ்ரேல் என இரு இடங்களிலுமே பதற்றம் நிறைந்தே காணப்படுகிறது. இதனிடையே, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்கா கூறி வருகிறது. கசாவை சுற்றி வளைத்து இருக்கும் இஸ்ரேலின் அடுத்த கட்ட மூவ் என்ன என்பதை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளே உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை ஆக்கிரமிக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில், காசாவை நிர்வகிக்கும் எண்ணமோ ஆக்கிரமிக்கும் எண்ணமோ எங்களிடம் இல்லை. காசாவிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறோம். முடக்கப்பட்டுள்ள அந்த பிராந்தியத்தை அனைத்து படைகளையும் வெளியேற்றிவிட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். காசாவில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிவில் அரசாங்கத்தை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றார்.

எனினும், அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்னி பிளிங்கன், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் குறித்து பேசுகையில், காசா முனையில் கட்டுப்பாட்டை பாலஸ்தீனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!