நாடு திரும்பிய கிரிக்கெட் அணி – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு…!!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது.

இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதாகவும், அவர்களின் சதித்திட்டம் காரணமாக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் 02 நாட்களில் பொது ஊடகங்கள் முன் அறிவித்து இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால்…

Read More
கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!