கொழும்பு வாகன நிறுத்துமிடங்களில் 27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தாமல் முறைப்பாடு!

நாட்டில் கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள் மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் கொழும்பு மாநகர சபைக்கு கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபாய்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியுள்ளன.

இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணையகம் முழுமையான விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.

முறைப்பாட்டின்படி, 26 நிறுவனங்களால், 2023ஆம் ஆண்டில், கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களுக்கு 204,164,110 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலுவைத் தொகை இருந்தபோதிலும், அந்த நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் வாகன நிறுத்துமிடங்களின் நிர்வாகத்தைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 ஏப்ரல் இறுதிக்குள் அந்த நிறுவனங்கள், மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 264,859,471 ரூபாய்களாகும் என்று என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!