கொக்கு போல காத்திருப்போம்…2026இல் தமிழகத்தில் ஆட்சியை தூக்குவோம் – அண்ணாமலை…!!!

தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் நடைபயம் மேற்கொண்டார். இதற்கிடையே நேற்று பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது,

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள் யாத்திரை இப்போது 103 தொகுதியை நிறைவு செய்துள்ளது. அடுத்த கட்ட நடைப்பயணம் 15ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. இந்த பாத யாத்திரையில் எனக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மக்களிடையே பாத யாத்திரைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கட்சி சாராத பலரும் கூட இதில் கலந்து கொள்கிறார்கள்.

சென்னையில் இருந்து கொண்டு ஆட்சி நன்றாக இருப்பதாக திமுகவினர் சொல்கிறார்கள். பல ஊர்களுக்குச் சென்றால் கள நிலவரம் அவர்களுக்குப் புரியும். மக்களிடையே அதிருப்தி இருக்கிறது. நடைபணத்தில் பலரும் ஆட்சி சரி இல்லை என்று தங்களிடம் முறையிடுகிறார்கள். குறிப்பாக விவசாயிகளைப் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், சில அரசியல் தலைவர்கள் கொக்கு மீன் என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள். நாங்கள் அரசியலில் கொக்கை போலப் பொறுமையாக இருப்போம். கொக்கு போலப் பொறுமையாக காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜகவுக்கு இருக்கிறது. அது 2026இல் உங்களுக்குத் தெரியும். மற்ற கட்சிகளுக்கு எங்கள் பலம் 2026இல் தெரியும். மக்கள் நல்லாசியுடன் 2026இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Related News

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

இந்திய கடற்படைக்கு இந்திய ரூபா 2,960 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகள் வாங்குவதற்கு இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. புதிய ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பலில்…

Read More
யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!