காசாவிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேல் காசா போர் தொடரும் நிலையில், காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த பாலஸ்தீனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலிருக்கும் ரஃபா என்னும் பகுதி வழியாக அவர்கள் எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். பல்வேறு நாடுகள், எகிப்திலிருக்கும் தங்கள் குடிமக்களை தத்தம் நாடுகளுக்கு அழைத்துவருகின்றன.

இந்நிலையில், சுவிஸ் நாட்டவர்கள் ஏழு பேர் காசாவிலிருந்து வெளியேறி எகிப்தை வந்தடைந்துள்ளார்கள். அவர்களில் ஆறு பேர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்.

அவர்கள் கெய்ரோவிலிருக்கும் சுவிஸ் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அதிகாரிகள் அவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.

சுவிஸ் குடிமக்களில் மேலும் ஒருவர், அவர் பாலஸ்தீனிய மற்றும் சுவிஸ் இரட்டைக் குடியுரிமை கொண்டவர், காசாவிலிருந்து வெளியேறுவதற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நான்கு பேர், இப்போதைக்கு காசாவிலேயே இருப்பது என முடிவு செய்துள்ளதாக, சுவிஸ் பெடரல் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வேறு சில நாட்டின் குடிமக்களும், இதேபோல காசாவிலேயே இருப்பது என முடிவு செய்துள்ளார்கள். இவ்வளவு காலமாக காசாவில்தான் வாழ்ந்தோம், இனியும் காசாவில்தான் வாழ்வோம், போர் விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம் என அவர்களில் சிலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் சுவிட்சர்லாந்து..!!

ஒக்டோபர் இறுதியில், சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் புதிய வடிவமைப்பைக் கொண்ட புதிய கடவுச்சீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையின் பெடரல் அலுவலகம் (Fedpol) புதிய கடவுசீட்டுகளில் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்திருந்தாலும், செயல்பாடு மற்றும் செயல்திறன் செயல்முறை அப்படியே…

Read More
வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டம்…!!

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!