இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 10 வீதத்தில் அதிகரிப்பு!

அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஓபன் டோர்ஸ் ( Open Doors ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான Open Doors Report on International Educational Exchange அறிக்கையின் வெளியீட்டை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. உலகத் தரமான கல்வியைத் தேடும் இலங்கை மாணவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையேயான வலுவான கல்வி உறவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமெரிக்கத்தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1.12 மில்லியன் சர்வதேச மாணவர்களை அமெரிக்கா வரவேற்றதை வெளிப்படுத்துகிறது. இது அமெரிக்காவை உயர் கல்விக்கான முன்னணி இடமாக உறுதிப்படுத்துகிறது. மேலும், EducationUSA பெயரில் உலகளாவிய கல்வி ஆலோசனை வலையமைப்பு 25ஆவது ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க தூதர் ஜூலி சங் கருத்து தெரிவித்த போது,

“அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தில் அதிகரித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வி, முன்தோற்றமான ஆராய்ச்சி என்பவற்றை வழங்குகின்றது. இவ்வளர்ச்சி, அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பின் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. EducationUSA போன்ற திட்டங்கள் மூலமாக, இந்த கலாசார பரிமாற்றத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஆதரிப்பதற்கு முயற்சி செய்கிறோம்.” என்றார்.

  • Related News

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

    Read More
    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!